வெள்ளி, 28 அக்டோபர், 2011

திருந்துவார்களா?



ரோஜா இதழென 
இருந்த அவள்
இன்று


வரதட்சணை என்னும்
சூறாவளியால்
வாடுகிறாள்


இச்சூறாவளி சென்ற
இடமெல்லாம்
ஸ்டவ் வெடிக்கிறது


மருமகள்
கொளுத்தும் போது
மட்டும்....


ஏன் அது
மருமகள்
கொளுத்தும் போது
மட்டும்....


அவளின் விலையில்லா 
உயிரை
விலையாகப்
பெற்று 
மற்றவர் பற்றி 
எண்ணாமல்.....


இக்கொடுமைகள்
அனைத்தும்
நம்
பாரத மண்ணின்
சாபமா?

கருத்துகள் இல்லை: