இவ்வளவு நாள்
நீ அழுது
எங்களை
மகிழச்செய்தாய்....
இப்பொழுதோ
உன் சிரிப்பை
விண்மீனாய்...
எங்களை
கண்ணீர் வடிக்க
வைக்கிறாய்....
எங்கள் கண்ணீரில்
என்ன பலனை
நீ
காண்கிறாய்.....?
உன் கண்ணீரோ
எங்களின்
துக்கத்தை
தீர்க்கிறது.....
இப்பாரினில்
பசுமை புரட்சிக்கு
வித்திட்டு
உதவுகிறது....
உபயோகமில்லா
எங்களின்
கண்ணீரை நிறுத்தி....
மேகமே
நீ
கண்ணீர்
விடு....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக