வியாழன், 27 அக்டோபர், 2011

எழுவோம்


இல்லாதவனுக்கு 
இளகிய மனது
இருப்பவனுக்கு 
இரும்பு மனது


கொடுக்க மனமிலா
செல்வனுக்கு
கோடி கோடியாய்
சொத்து


உழைத்து வாழும்
ஏழையோ
வானமே கூரையாய்
வாழ்கிறான்


சுதந்திர நாட்டில் 
அடிமையாய்
சோர்ந்து கிடக்கும்
ஏழை மனிதனின்
அடிமைத் தளையை
அறுத்து எறிந்திட


ஆறுதல் செய்து
அவர்களை தேற்றிட
செல்வனின் அகந்தை
நெருப்பு அழிந்திட


அருவிபோல் பாய்ந்து 
அனைவரும் எழுவோம்

கருத்துகள் இல்லை: