செவ்வாய், 25 அக்டோபர், 2011

பயன் என்ன ?


விவேகம் இல்லா
விஞ்ஞானம்

ஆபத்திற்கு உதவா
பிள்ளை

அரும்பசிக்கு உதவா
அன்னம்

தாகத்தைத் தீரா
தண்ணீர்

தரித்திரம் அறியாப்
பெண்டீர்

பாவத்தைத் தீரா
தீர்த்தம்

கோபத்தை அடக்கா
அரசன்

குருமொழி கொள்ளாச்
சீடன்

கருத்துகள் இல்லை: