வியாழன், 9 பிப்ரவரி, 2017

மாலை நேரத்து மழை



அந்தி இளமாலை வெயிலில்
சந்திரன் முகம் பார்த்த போது
கண்ணில் விழுந்ததடி உன் நிழல்
மெல்லாக்கரம் பிடித்து வீதிவழி நடக்கையிலே
பூங்காற்று துணையோடு
தழுவ வந்த அம்மழையில்
தழுவிச்சென்ற தேகத்தின் இனிமை நினைவுகள்
மறப்பதெளிதோ?
ஓவியப் பதுமையுன்
கனவு பார்வையிலே
காதலும் நனைந்ததடி
அந்த
மாலை நேரத்து மழையில்


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: