புதன், 22 பிப்ரவரி, 2017

உயிர் பறவை



அந்த பறவை பறந்துவிடாமல் இருக்க
எல்லா பாதைகளும்
அடைக்கப்பட்டிருந்தது
அடைபட்ட கூண்டுக்குள்
அந்த பறவை சுற்றிச்சுற்றி வந்தது..
இன்பங்களில் சிரித்து
துன்பத்தில் அழுது
வேதனையில் வெம்பி
துக்கத்தில் செருமி
எல்லா பாரங்களையும் சுமந்து
வெளியேறும் பாதையறிமால்
சுற்றி வந்தது..
சில நேரத்தில்
மகிழ்ச்சியின் களிப்பில் பாதை திறக்க
சில நேரத்தில்
சோகத்தின் அழுத்தத்தில் பாதை திறக்க
சில நேரத்தில்
எதிர்பாரா நிகழ்வில் பாதை திறக்க
சில நேரங்களில்
பாதையே பலவீனப்பட்டு தானாக திறக்க.
சில நேரங்களில்
சிறைவாழ்க்கை பிடிக்காமல் பாதை உண்டாக்கியும்
பறந்துவிடுகிறது அந்த பறவை..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: