ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

மெல்லினமும் காதல் நதியும்



புள்ளினத்தின் பூவினத்தின்
வெண்மேக மெல்லினத்தின்
வருடி செல்லும் தென்றலென
வார்த்தை தரும் மென்மையென
முயலாத வேளையிலே
முயலினத்தின் துள்ளலென
பார்வையாலே எனைப்பருகி
பைய்ய நடந்துவரும்
பருவ எழில் பொன்மயிலே
பாய்ந்து வரும் காட்டாறாய்..
பின் தவழ்ந்து வரும் நதியெனவே
காதல் சுமந்து வரும்
பொன்மகளே பெண்மகளே
என் காதல் கனவுகளை
சுமப்பதெல்லாம் நீ தானே
காவியமோ ஓவியமோ
காமனவள் தூதுவளோ
உன் விழி இமைக்க சிறைப்பட்டேன்
இதழ் விரிக்க அகப்பட்டேன்
காதல் நதியினிலே...
கண்மணியின் மெல்லினமே
கட்டி அணைத்து விடு
உயிர் தீயை ஏற்றி விடு
இச்சை அகற்றி விடு
இன்பத்தை ஈந்துவிடு


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: