ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

தூண்டில் வார்த்தை

தூண்டில் வார்த்தையில் மயங்கிய நேரத்தில்
அன்பே ஆயுதமாய் சுமக்க..சுமையான சுகராகம் மனமிசைக்க
கையில் இருந்து களவாடப்பட்டது சுதந்திரம்
அடைக்கலமென நம்பிய கரங்கள் அடக்குகிறது..
எங்கோ மிதக்கும் கனவுகளின் வெளிகளில் உள்ளம் துடிக்க
வாரி அணைத்திட்ட வண்ணமிகு நாட்கள்..
உறங்காத உள்ளத்தில் இன்பத்தின் கனவுகள்
தேடித்தேடி அலைந்த துயரத்தை துரத்துகிறது
ஆராதிக்க தெரியாத உள்ளத்தில் என்றும்
அடங்காத கோபம் கொதிநீராய்..
கனல்வீசி கணையாய் பாய்கிறது அந்த விழிதூண்டில்


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: