வெள்ளி, 15 செப்டம்பர், 2017

"ஆண்களின் தேடல்களும் இலக்கும் "



இலக்கின்றி திரிபவரா ஆண்கள்?
இல்லையே....
அவர்களின் கனவுகளா இலக்குகள்..
அது மட்டுமேயில்லையே..
உயிர் உறவுகள் எல்லோரையும் மனதில் சுமந்து
தினம் தினம் அவர்கள் நினைவுகளை
நெஞ்சில் சுமந்து
அவர்கள் கொண்ட கனவுகளையும் மெய்யாக்க
தேடிக்கொண்டும் ஓடிக்கொண்டும்
இருப்பது தானே அவர்களின் இலக்கு..
தலைமகனாய் இருந்து விட்டால்
பின் பிறந்தவரின் வழிகாட்டியாக
பெண்களுக்கு சகோதரானாக வாழ்நாளில்
பெருநாட்கள் அவர்களுக்கு செய்வதிலே இன்பம் கண்டு
அதில் வரும் துன்பங்களையும் சுமந்துகொண்டு
நடைபோடுவதும் அவர்களின் இயல்புகளே..
கொண்டவளை கலங்காது காத்துக்கொண்டு..
முன்னோரையும், பின்னோரையும் கூடவே
அணைத்துக் கொண்டு..
தன்நலனே பார்க்கமால்
இரவு பகல் நோக்காமல்
ஓடுவதும், தேடுவதும் ஓயாமல் உழைப்பதுமே
ஆண் மகனின் தேடலும் இலக்குமாய்..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: