நிஜமென்றால் அங்கு பொய்யில்லை..
பொய் என்றால் அங்கு நிஜமேது...?
நிஜமான பொய்யும் உண்டோ?
இல்லாமலா..?
வார்த்தை வருகிறது....
கவிதைகளில் வாழ்கிறது..
நிலவும் இருக்கிறது பெண்ணும் இருக்கிறாள்..
நிலவுப்பெண்ணே என்பது நிஜமா? பொய்யா?
அன்பதனை அள்ளி கொடுக்கையிலே
ஒளிரும் முழுநிலாவாய் இருக்கும் பெண்ணே..
கோபத்தில் சுருண்டுவிட இருண்டுவிடும்
மறைநிலவாய் மாறிவிடுகிறாள்..
பொய்யென்று அறியாவகையில்
பொய் சொல்லுவான் சாமர்த்தியசாலி..
பொய் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும்
ஏமாறுவான் வாக்காளன்..
என் பொய்களோ யாரையும் காயப்படுத்தாது....
எல்லாமே விளையாட்டாய் என் சிரிப்பில் உதிர்ந்துவிடும்..
அதே சிரிப்பிலே உண்மையும் விளங்கிவிடும்...
வலிகள் தராத பொய்யென்றும் பொய்யல்ல
வள்ளுவனே வகுத்து தந்தான் வழியொன்று
நல்லது நேருமென்றால் பொய்யுரைக்க தவறில்லை..
அல்லது நேருமென்றால் தலைபோனாலும் பொய்யற்க..
பொய்மையிலும் வாய்மையுண்டு..
வாய்மையிலும் பொய்மையுண்டு..
வாழும் வழி அறிந்துகொண்டு
வாழ்ந்திடுவோம் உலகில் நன்று..
- அன்புடன் சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக