வியாழன், 14 செப்டம்பர், 2017

அரவணைப்பீரோ ஆண்களே..!



நீ பிடித்த கரங்கள் தான்...
நீ பார்த்து ரசித்த முகம் தான்..
நீ அணைத்துக்கொள்ளும் தோள்கள் தான்..
நீ துயில் சாயும் மடிதான்..
நீ உலா வரும் இதயம் தான்..

உனக்காக வந்தாள்..
உனக்காக உழைக்கிறாள்..
உனக்காக வாழ்கிறாள்..
உனக்காக வாரிசு சுமக்கிறாள்...
உன்னையே நெஞ்சிலும் தாங்குகிறாள்..

அதிகபட்சம்
என்ன கேட்கிறாள் உன்னிடம்.....?

களைத்திருக்கும் நேரத்தில் இதமான வார்த்தை..
சோர்ந்திருக்கும் நேரத்தில் கொஞ்சும் ஆறுதல் மொழிகள்..
பரபரப்பான நேரத்தில் கொஞ்சம் ஒத்தாசை..
பரிதவிக்கும் நேரத்தில் தரும் பாச தழுவல்..
கலங்குகின்ற நேரத்தில் குழல்கோதும் அரவணைப்பு..

அன்புக்கு அன்பு தரவும்..
ஆசைக்கு ஆசை தரவும்..
நேசத்துக்கு நேரம் தரவும்
பாசத்துக்கு பாசம் தரவும்
என்ன யோசனை.....?

வாழ்க்கையிலே உனக்காகவே உன்னோடு
பயணம் செய்யும் உயிர்தானே.....
உன்னில் பாதியென இருக்கும் அவள்..

இன்னும் என்ன தயக்கம் தோழர்களே..
மெல்ல உங்கள் ஜீவனை
அரவணைப்பீரோ ஆண்களே..!


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: