திங்கள், 4 செப்டம்பர், 2017

வலையில் வீழ்ந்த நிலவு..



நிலவுப்பெண்ணே..
கொஞ்சம் நிதானி....
அது தாலாட்டும் ஊஞ்சலென எண்ணாதே..
உன்னை சிறையிலிடும் பெருவலை..

இங்கே வஞ்சகம் வாசனை திரவியமாய்
உன்னை கவர்ந்திழுக்கும்..
கொஞ்சிடும் பார்வையிலே உன் கண்களை
மெல்ல ஈர்த்திடும்
அதன் கோரக்கரங்கள் கண்ணில் ஏய்த்திடும்..
தேனிலே தடவிய வார்த்தையில்
உண்மையை மாய்த்திடும்..
ஆசையாய் அணைத்து ஆலிங்கனம் செய்தே
பொய்யில் உன்னை துய்த்திடும்..

வானத்தின் நேசம் பொய்யாகுமா?
நீயும்
பூமி இறங்கி வந்து வலையில்
வீழ்வதும் மெய்யாகுமா?
வார்த்தை வலைவிரிக்கும்
இந்த வஞ்சக உலகை நம்பாதே பெண்ணே..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: