வெள்ளி, 1 செப்டம்பர், 2017

தாயுமானவன்..2



யாதுமாகி நிற்கும் அவன் வாழ்வது
பலனுக்காக அல்ல – பாசத்துக்கு

அன்புக்கு அடிமையாகிடுவான் என்றும்
நேசத்தை விட்டுவிட மாட்டான்..
சலிப்பு என்பது இல்லை அவன் அகராதியில்..
குட்டகுட்ட வாங்குவான்
எட்ட நின்றாலும் நினைவெல்லாம் பாசம் தானே..
வேசமிட்டோர் வாழ்கிற போது
உண்மையாய் தாங்கிடும் அவன்
வேதனையில் வீழ்ந்தாலும்
காத்திடம் குணத்தை மறப்பதில்லை..
மறுப்பதுமில்லை...
தன்னலம் ஒன்று அறியாதவன்
என்றும் அன்டினோர் நலனே காத்திடுவான்..
அவனுக்கான பரிசு பாராட்டு அல்ல
கனிவான அணைப்பில் ஒரு முத்தம்..

யாதுமாகி நிற்கும் அவன் வாழ்வது
பலனுக்காக அல்ல – பாசத்துக்கு


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: