வெள்ளி, 28 ஜூலை, 2017

ஆண்களின் அர்ப்பணிப்பு



ஓயாது கரைதேடும் அலையாகி..
பொருள்தேடி உழைக்கின்றான்...

உருகுகின்ற மெழுகாகி
ஒளி தரும் தீபமாகி..
பாசத்தின் கனி நெஞ்சை மறைத்து
முள்ளான பலாவெனவே நிற்கின்றான்..

சுட்டுவிடும் சூரியனாய் தோன்றினாலும்
உள்ளுக்குள் எரிவதை யார் அறிவார்....

வேதனையின் சுவடுகளை நெஞ்சில் தாங்கி..
இன்பத்தின் மழையினை பொழிந்துவிடும்
கல்நெஞ்ச கார்மேகம் அவனல்லவா...

குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக சுயம் மறைத்து
அவர் விருப்ப உருமாறும் பச்சோந்தி பாசக்காரன்...

கிளைபரப்பி தழைத்து செழிக்க...
தன் நிழலிலே ஒதுங்கி
தானே வேரென்பதை மறக்கும் நெஞ்சே..

தியாகம் என்று பார்ப்போர்கள் பாராட்ட..
என் மக்கள்..
என் கடமை...

புன்னகையில் கடந்து போகும் மாமனிதம்...

கருத்துகள் இல்லை: