செவ்வாய், 25 ஜூலை, 2017

நவரத்தின மாலை



“எதிர்பார்க்கிறேன்”..
இந்த “பூந்தோட்டத்தில்” பூத்த மலர்களாம்
நட்பூக்களை சந்தித்து “மகிழ்ச்சி” கொள்ள..
சந்திக்கும் வேளையில்
வார்த்தைகள் தொலைந்து போனாலும்
உள்ளம் துள்ளுமே மகிழ்ச்சியில்..

“கவலை” என்று எண்ணி தனித்திருக்கும் வேளையிலே
மெல்ல “நான்” உணர்வுகளை பதியன் போட
ஆயிரம் அன்புடன் “எத்தனை” எத்தனை
அன்பான வார்த்தைகள்..

ஆறுதல் சொல்லி மெல்ல தட்டிக்கொடுத்து
இனிய நினைவுகளை மனதில் கிளறி
ஏக்கங்கள் போக்கும் “நீயே”..
எங்களை இணைத்திட இனிய மேடை..

“தமிழினும்” “இனிய” சுவையுண்டோ?
கேள்விக்கணைகளால் யாரும்
துளைக்க வேண்டியதில்லை....? உண்டு..
இங்கே நட்புக்களும், நட்பின் வாழ்த்துகளும்
திகட்டாத சுவைதானே..

காற்றில் தலையாட்டி இசைபாடும் மரமாய்
பாராட்டில், வாழ்த்தில், போற்றுதலில்
எல்லோரும் சுகித்திருப்பதை யாரும்
மறந்திடத்தான் முடியுமா?
மறுத்திடத்தான் முடியுமா?


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: