முடிந்து போகும்
எல்லாவற்றிக்கும் இங்கே சண்டைகள்...
கடந்து போகும்
கண்ணிமைக்கும் காரணத்துக்கும் சண்டைகள்...
சிறு புன்னகையின் வீச்சில்,
சிறு மௌனத்தின் பார்வையில்
ஒரு சிநேகத்தின் அணைப்பில்
முடிந்து போகும் எல்லா சண்டையும்...
சமாதனம் என்பது பிறருக்காக என்னும்
மனநிலை விடுத்து நமக்காக என்று நினைத்து
வைக்கும் அடிகளில் நமக்கான நிம்மதி
பூக்க காத்திருக்கிறது..
அன்புக்கும் ஆசைக்கும் விட்டுக்கொடுக்க
ஏன் காதல் மனைவியுடன் சண்டை வரும்..??
அந்த யுத்ததில் காணும் சமாதானம்
இனியது...
அதற்காக வேண்டும் ஊடல்..
ஊடலின் சமாதானம் என்னவென்று அறியதார்
யார்??
அந்த சமாதானத்திற்கு விரும்பாதர்
யார்...??
அந்த போர்க்களத்தின்
காயங்கள் எல்லமே சொல்லும்
யாரும் அறியாத இன்பக்கதைகள்..
அட.. அப்புறம் என்ன
சண்டையும் சமாதானமும் வாழ்க்கைச்
சாகரதின்
இனிமை தானே..
வளருகிறோம் என்கையில் கூடவே
களையாக வளருவதும் பகைமை
தானே...
எங்கும் வளரும் இந்த பகைமையின் சண்டையில்
தொலைப்பது நமது வளர்ச்சிதானே...
ஒரு சமாதான கோட்டில் வளர்வது தானே
நாடுகளின் வளர்ச்சி..
இதில் நமக்கென்ன அயர்ச்சி..
ஒற்றுமையின் கொடி பிடித்து
ஒன்றாய் வளர்கையில்
வேற்றுமையின் வேர்கள் எல்லாம்
அடியோடு அல்லவா அறுக்கப்படுகிறது..
வாருங்கள் கைகொடுப்போம்..
சண்டைகள் முடித்து சமாதானத்திற்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக