புதன், 12 ஜூலை, 2017

திமிரெனும் திரவியம்

புன்னகையில்
கோபத்தை மூட்டி 
புரிதலில்
தன்னிலை நாட்டினாய் 

பூக்கள்
தூவியிருக்கும் பாதையில் அல்லாது
கரடுகளின் வழியே
என் பயணத்தை அமைத்தாய்....

நேசங்களை
நான் நேசிப்பாய் சுவாசிக்கையில்
வேஷங்களை மட்டுமே
உன் வேதமாக்கினாய்..

நம்பிக்கையின் வேர்களில்
நான் நீரூற்றி செல்ல
ஆணிவேரை அறுக்கவே
பின் தொடர்ந்தாய்..

திசையெல்லாம் வீசிச்செல்லும்
காற்றாய் நானிருக்க..
உன் மூச்சுக்காற்றில்
அடைத்துக்கொள்ள துடிக்கிறாய்..

என் சுயத்தில் நானும்
எரியும் தீபமாய் ஒளிர –நீயோ
திமிரெனும் திரவியம் தீர

தீயை தீண்ட தோன்ற வைத்தாய்..!

கருத்துகள் இல்லை: