செவ்வாய், 11 ஜூலை, 2017

துருப்பிடித்த ஆணி

எல்லா மாய, பேய்க்கதைகளிலும் வருகிறது
அந்த துருப்பிடித்த ஆணி..
கட்டுக்குள் இருக்கும் யாரோ ஒருவர்
அந்த ஆணியை யார் பிடுங்குவர்
தம்மை விடுவிப்பவர் யார்? என்று
காத்திருக்கும் தருணங்களே கதையின்
உயிரோட்டமாய்...
கற்பனை கதையை விடுங்கள்..
நாமும் நமக்கான அந்த மாய ஆணியை
யாரோ ஒருவர் பிடுங்கவே காத்திருக்கிறோம்..
நம்மை சுற்றிக் கட்டிப்போட்டு இருக்கும்
பல மாய கட்டுக்களில் இருந்தும்..
நம்மை பின்னிப்பிணைந்து இருக்கும்
பிரச்சனை வலைகளிலும்..
மூச்சுமுட்ட மூழ்கடித்துக் கொண்டிருக்கும்
மாய அழுத்தத்திலும்..
எதோ ஒரு ஆணியில் நமது சுதந்திரமும்
விடுதலையும்
பிரச்சனைகளின் விடிவும்
துக்கங்களின் விடுதலையும்
இருப்பதாக நினைத்து காத்திருக்கிறோம்
அந்த ஆணியை பிடுங்கும் யாரோ ஒருவருக்காக..
அது தேவதையகினும் சரி..
தேவதையை சிறைவைத்த அரக்கனாகிலும் சரி
பேயை விரட்டும் மந்திரவாதியானாலும் சரி..
அந்த ஆணி பிடுங்கப்படவேண்டும் என்பதே
நம்மின் காத்திருப்பு..
எல்லா கற்பனை கதைகளையும்
வென்றுவிடுகிறது
கொஞ்சமும் முனைப்பின்றி காத்திருக்கும்
நம் யாதார்த்த வாழ்க்கை....


(தடம் பத்திரிகை கே. முரளிதரன் கட்டுரை பாதிப்பு)

கருத்துகள் இல்லை: