சனி, 15 ஜூலை, 2017

புயலில் சாயாத வேர்கள்...



பூமியுடன் பிரியாத தாகம் கொண்ட வேர்கள்..
எந்த புயலையும் கண்டு அஞ்சுவதில்லை..
தலையசைந்து தலையசைந்து காற்றில் ஆடினாலும்
என்றைக்கும் விட்டுவிடுவதில்லை தன் நேசத்தின் பிடியை..
பாசத்தின் வேரில் வாழும் உள்ளங்களின் உணர்வுகள்
போராட களங்களில் தலைகீழாகி பிரிவதில்லை..
சுழலும் சூறாவளியானாலும்
சுடும் வெப்பக்காற்றின் சலனமாலும்..
வேர்கொண்ட நம்பிக்கைப்பிடிப்பு வீழாது நிற்கும்..
காற்றின் கரம் மெல்ல தழுவி மோக தென்றல் வீசி
வேர் கிளப்ப நினைத்தாலும் முயற்சியில் தோல்வி கண்டு
தோற்றே ஓடிவிடும்..

நம்பிக்கை... அது புயலில் சாயாத வேர்கள்.. 

கருத்துகள் இல்லை: