வெள்ளி, 10 ஜூலை, 2015

மகாபாரதத்தில் இது உங்களுக்கு தெரியுமா?

பீஷ்மர் சரியாக தன்னுடைய முழு ஆற்றலுடன் போரிடவில்லை என்று அவரை துரியோதனன் எப்பொழுதும் குறை கூறிக்கொண்டு இருந்தான்.
பீஷ்மரும் வெறுத்து போயி , நாளை நான் பாண்டவர்களை சாய்கிறேன் என்று சொல்லி ஒரு ஐந்து அம்புகளை தயார் செய்து துரியோடனுக்கு காண்பித்தார் . துரியோதனன் அவரை நம்பாமல் , அந்த பானங்களை தன்னிடம் கொடுக்கும் படி கேட்டு , தான் இதை நாளை பிரயோகித்து அவர்களை மடிய செய்வேன் என்று சொல்லி வாங்கிக்கொண்டு சென்று விட்டான்.
இது நம்ம மாயக்கண்ணன் சகல வியாபி பரமாத்மா கிருஷ்ணனுக்கு தெரிய வந்தது.
உலகின் மிகப்பெரிய சாணக்கியதாரி அவர்,அர்ஜுனனை கூப்பிட்டு , நீ ஒரு முறை துரியோதனன் உயிரை கந்தவர்களிடமிருந்து காப்பற்றிய பொழுது அவன் உனக்கு ஒரு வரம் கொடுத்தான் அல்லவே. நீ இன்று சென்று அந்த அம்பு பாண்ணங்களை அவனிடமிருந்து அவன் கொடுத்த வரத்திற்கு ஈடாக பெற்று வா என்று சொல்லி அனுப்ப , அவனும் அழகாக சென்று துரியோதனிடம் கேட்க , துரியோடனும் மறுக்க முடியாமல் , அந்த அம்புகளை அர்ஜுனனிடம் கொடுத்து விட்டான் .
பின்பு பிஷ்மரிடம் சென்று இன்னும் அதே போல 5 அம்புகள் வேண்டும் என்று கேட்க அவரும் என் ஆயுளின் எல்லா தவபலமும் கொண்டு உருவாக்கப்பட்ட அம்பு அவை. அதே போல இன்னொரு முறை உருவாக்க முடியாது என்று மறுத்துவிட்டார் .
ஆக, பாண்டவர்களை வெற்றி பெற இருந்த மற்றொரு சந்தர்ப்பத்தையும் துரியோதனன் நழுவ விட்டான்.
Ranga Nathan's photo.
கட்டுரை நன்றி https://www.facebook.com/photo.php?fbid=1107699659260086&set=a.264360220260705.78637.100000601878768&type=1&theater

கருத்துகள் இல்லை: