வெள்ளி, 29 ஜூலை, 2016

எண்ணத்தில் முத்தமிட்டால்(ள்)



வார்த்தைகளின்றி வந்த
பாவையுன் பார்வை மொழியில்
எண்ணங்கள் முத்தமிட...
கைபடர்ந்த வேளையிலே..
மெய் மறந்து நின்றுவிட்டேன்..

தேன்குமிழாய் பொங்கிவிட்ட
தேகச்சிதறலில் மௌனத்தின் மௌனங்கள்
மெல்ல மெல்ல பேசிக்கொள்ள....
கொல்லுகின்ற எண்ணங்களின் மொழி தான் என்ன??

சத்தமின்றியும் பேசுகிறாய்!
முத்தமின்றி இதழ் கவிதை சொல்லுகிறாய்!
சொல்லுகின்ற வார்த்தைகளின்
அர்த்தங்கள் காண்பதற்குள்
எல்லாமே கரைந்து போகிறது

உன் பார்வையின் வீச்சில்..
நித்திரைகள் குலைகின்ற இரவின் பிடினியிலே
மோகத்திரை பின்னால் நின்று
எட்டிப்பார்க்கும் பெண்ணிலவு நீ.

உயிர் துடிக்கும் வேளையிலே
உயிர் பறிக்கும் புன்னகையில்
என் எண்ணத்தில் முத்தமிட்டால்(ள்)

நொறுங்கிப்போனது என் வார்த்தைகளின் சத்தம்..

கருத்துகள் இல்லை: