விட்டுவிடு..
துக்கங்களை எல்லாம்
வழிந்த கண்ணீரோடு..
தொலைத்துவிடு எல்லா
சோகங்களையும்
வெளிவிடும் மூச்சோடு..
புதிய பிறவியாய் உன்னை
உணர்வாய்..
மனதின் நம்பிக்கை ஒரு
புதியபாதை தரும்..
கம்பளிப்பூச்சியாய் இன்னும்
உலகில் நெளியாமல்...
புது உற்சாக கூட்டை
அணிந்துகொள்..
கொஞ்சம் தனித்திரு..
நெஞ்சம் படித்தெடு...
உள்ளம் ஒருங்கிணை..
மூச்சை அடக்கு..
தெளிவு கொள்..
மெல்ல கூட்டைப் பிரித்து
வெளியே வா...
பார்..
சந்தோசம் தரும்
உலகை..
உன்னையும் கொஞ்சம் உற்றுப் பார்..
உன் புதிய வடிவை மெல்ல நோக்கு..
இப்போது உன் மெல்லிய
சிறகுகளை
விரி...
.
நீ புதிதாய் பிறந்த பட்டாம்பூச்சி....
இப்போது
சிறகடி..
உலகம் எல்லாம் உனதே..
-சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக