செவ்வாய், 2 ஜனவரி, 2018

கடவுள்..

கடவுள்..

ஏகாந்த பெருவெளியில் இருப்பதாய்
உன்னை தேடுது மனசு..
உள்ளத்தில் உள்ளதை புரியாமல் வைக்கிறது
அறியாமை வேர்..
கள்ளமில்லா குழந்தை புன்னகையில்
உணர்வது பேருண்மை..
ஏழையின் சிரிப்பினில் ஒருவர்
கண்டார் உன்னை..
எங்கும் நிறைந்திருக்கும் காற்றாய்..
எங்கும் நிறைந்திருக்கும் ஒளியாய்..
எங்கும் நிறைந்திருக்கும் ஒலியாய்..
எங்கும் நிறைந்திருக்கும் திருவாய்..
மெய்யாய் நிறைந்திருப்பதால்
மெய்யின் கண் தன்னையே காண்பதில்லையோ?
எதோ எப்படியோ..
இருப்பதாய் இருந்தால் இருந்துவிடு..
இருந்தால் நலமே என்பதும் மகிழ்வே..
சுயநலக்காரர் கூட்டுக்குள்
சுதந்திரம் மறந்த கிளியாய்
சதிராட வேண்டாமே..


#சங்கர்_நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: