திங்கள், 1 ஜனவரி, 2018

தமிழே..

தமிழே..

எந்தன் மொழியாம் தமிழால் நான்
சிறகில்லாமல் வானில் பறக்கிறேன்
அதன் சொல்லும் பொருளும்
வேராய் இருக்கிறது பல மொழிகளுக்கு...
குறைவில்லை எம்தமிழில் பழமொழிகளுக்கும்..
சின்ன குழந்தையாய் பிடித்துக்கொள்ளும்..
கொஞ்சும் குமரியாய் பற்றிக்கொள்ளும்..
தாயாய் இருந்து தாலாட்டும்..
தினமும் என்னை சீராட்டும்..
செந்தமிழே என் செல்லத்தமிழே
வெல்லமென இனிக்கும் நறுஞ்சுவையே..
நாவூறும் உன்னை நினைக்கையிலே..
பாவாகும் உன்னை சுவைக்கையிலே..
எம்மொழியே
என்றும் இளைமை குன்றா மூத்தவளே..
உன்னை படித்தவர்க்கு செருக்குண்டு
எனில்..
உன்னில் பிறந்தோருக்கு??


#சங்கர்_நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: