திங்கள், 28 ஆகஸ்ட், 2017

என்னவள்

வெட்கிடு நீயும் ஓடிடு நீயும்
தேய்ந்திடும் வெண்ணிலவே..
இவள் தேய்வதும் இல்லை மறைவதும் இல்லை
தினம் ஒளிர்ந்திடும் சுடரொளியே..
உன் நார்த்தனமாடும் கரு விழியினில்
பூத்திடும் அன்பில் கரைந்திடுவேன்..
கைகள் அணைத்திடும் வேளையில்
தொட்டாச்சிணுங்கியாய் உன்னில் மயங்கிடுவேன்..
சித்திரை இரவினில் குளிர் நிலவென வருகையில்
நித்திரை தொலைத்தேனே..
பத்தரைமாற்றுத் தங்கமே உன்னெழில் பருவத்தில்

மலர்ந்திடும் குறுஞ்சியின் புன்னகையோ?

கருத்துகள் இல்லை: