திங்கள், 21 ஆகஸ்ட், 2017

கனவே

அன்பான தாலாட்டில் சேயாக்கி பார்க்கிறாய்..
அமுதம் வழங்கும் வேளையில் தாயாகி நிற்கிறாய்..
வேதனை நேரத்தில் தோழமையாய் வழிகாட்டுகிராய்..
விம்மியழும் வினாடிகளில் மெல்ல தோளணைத்து
தலைகோதும் விரலாமே விழிநீரையும் ஏந்துகிறாய்..
இன்ப வார்த்தைகளில் மௌனிக்க வைக்கிறாய்..
ஆசை அணைப்பில் உள்ளம் பொங்கவைக்கிராய்..
மோகப் பார்வையில் முழுதும் கொள்ளையிடுகிராய்..
முத்தம் கொடுக்கையில் மொத்தமாய் கொல்லுகிறாய்...
காதல் விளையாட்டில் எல்லா கட்டுக்களையும் உடைக்கிறாய்..
எல்லாமே

கண்விழித்து பார்த்தபோது கனவாகி போனதேனோ...?

கருத்துகள் இல்லை: