செவ்வாய், 21 ஏப்ரல், 2015

பி12 வைட்டமின் பற்றிய தகவல்


 
கட்டுரையாக்கம்: திரு.  Neander Selvan

பி12 என்பது என்ன? எப்படி உருவாகிறது? ஏன் தாவர உணவுகளில் அது இல்லை? தாவர உணவுகளில் அது இல்லையெனில் ஆடு, மாடு முதலான சாகபக்ஷிணிகளுக்கு பி12 எப்படி கிடைக்கிறது? அதன் இறைச்சியை உண்டுதான் நாம் பி12 பெறுகிறோம் எனில் அவற்றுக்கு எப்படி அது புல்லை மட்டும் உண்பதால் கிடைக்கிறது?
பி12 என்பது நம் பெரும்குடலில் உள்ள பாக்டிரியாக்களால் தயாரிக்கபடுகிறது. ஆக நம் உடலிலேயே போதுமான அளவு பி12 தயார் ஆகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பி12 உற்பத்தி ஆகும் இடத்துக்கு சற்று மேலே பி12ல்லை கிரகிக்கும் ஐலியம் எனும் குடல் பகுதி உள்ளது. ஆக கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை எனும் கதையாக நம் உடலில் உற்பத்தி ஆன ஒட்டுமொத்த பி12ம் அப்படியே கழிவில் வெளியேறுகிறது. இப்படி நம் உடலில் உற்பத்தி ஆகும் பி12 நம் உடலை சேர முடியாமல் போகிறது.
ஆக நாய், பன்றி முதலானவை அடிக்கடி மலம் தின்ன காரணம் இதுவே..பி12 பற்றாகுறை வருவது போலிருந்தால் அவை மலத்தை உண்டு அதை தீர்த்துக்கொள்ளும். இயற்கையில் சிம்பன்ஸி முதலான பல மிருகஙக்ள் இப்படி மலத்தை உண்ணும் வழக்கம் கொண்டவை.
ஆடு, மாடு முதலானவை புல்லிலேயே மலம், சிறுநீர் கழிந்து அதே புல்லை மேய்வதால் அவற்றுக்கும் பி12 கிடைக்கிறது. தவிரவும் புல்லை உண்கையில் அதில் உள்ள பூச்சி முட்டை, பூச்சி, ஈ, எறும்பு எல்லாமே அவற்றுக்கு உணவாகி பி12 கிடைக்கிறது
இத்தகைய பாக்டிரியா விளைவு காய்கறி/ பழத்தில் நடைபெறுவது இல்லை, உயிரினங்களின் பெரும்குடலிலேயே நடைபெறுகிறது என்பதால் தாவர உணவுகள் எதிலும் பி12 கிடையாது.
ஆனால் முன்பு நதிகளில் ஏராளமாக மனித, மிருக கழிவுகள் சேர்ந்தன. இப்படி கண்டாமினேட் ஆன நீரில் கழிவு இருப்பதால் சுத்தமற்ற இந்த நீர் மூலம் பி12 கிடைத்து வந்தது. இப்படி பி12 அசுத்தநீரில் கிடைத்ததால் பால் குடிக்ககூட வழியற்ற பல ஏழைநாட்டு குழந்தைகள் பி12 தட்டுபாட்டில் இருந்து காப்பாற்றபட்டார்கள். ஆனால் நீர்நிலைகள் பில்டர் செய்யபட்டு, காய்ச்சி வடிகட்டபட்டு குடிக்க துவங்கியபின் நீரில் இருந்த பி12 அகற்றபட்டுவிட்டது.
ஆக இன்று பால்/அசைவ/முட்டை உணவுகள் தவிர்த்து வேறு எந்த வழியிலும் பி12 நமக்கு கிடைக்க வழியில்லை.

கருத்துகள் இல்லை: