ஞாயிறு, 9 நவம்பர், 2014

உண்மை தெரியுமா

பாம்புக்கு பால் வைப்பது இன்றும் நடந்து வருகின்றது. ஆனால் எதற்காக என்று கேட்டால் யாருக்கும் தெரியாதாம்... சிலர் பாம்பு பாலும், முட்டையும் தான் சாப்பிடும் என்பார்கள். 

உண்மை தெரியுமா பாம்பு, பால் முட்டை சாப்பிடுவதே இல்லை.

பாம்பினுடைய நாக்கு பிளவுபட்டது. அதானால் பாம்பினால் பால் குடிக்க முடியாது என்று கண்டுபிடித்துள்ளனர். இது விஞ்ஞான ரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மை.

அப்படி இருந்தும் ஏன் பாம்புக்கு பால், முட்டை வைக்கிறார்கள்???

சரி விசயத்திற்கு வருவோம்.. ஆதிக்காலத்தில் பாம்புகள் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. ஏனென்றால் பெரும்பாலும் அந்த காலத்தில் மரங்கள், செடிகள் அதிகமாக இருந்ததால் பாம்புகளும் அதிக அளவில் இருந்து மனிதனுக்கு தொந்தரவு செய்து வந்தது.. இருந்தாலும் ஆதி கால மனிதர்கள் பாம்புகளை கொல்ல நினைக்காமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நினைத்தனர். இதன் விளைவு தான் முட்டையும், பாலும்.

என்ன புரியவில்லையா...?

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்ளுவது கொஞ்சம் வித்தியாசம். பெண் பாம்பு தன்னுடைய உடலிலிருந்து ஒருவித வாசனை திரவத்தை (ப்ரோமொன்ஸ் ) வெளிப்படுத்தும். அதனை நுகர்ந்து ஆண பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பின்னர் அது இனப்பெருக்கம் செய்யும். இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வர கூடாது. அப்படியென்றால் பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை நிறுத்த வேண்டும்.

இதற்கு தான் அக்காலத்தில் கண்டுபிடித்தார்கள் ஒரு
தீர்வு.... பால், முட்டை

பாலை பாம்பிற்கு ஊற்றுவதால் பெண் பாம்பின் மேலிருந்து வெளிவரும் அந்த வாசனை கட்டுப்படுத்தப்படுகிறது. அப்போ முட்டை? முட்டையை பாம்பு கொத்தி உடைத்துவிடும் அதனால் முட்டையிலிருந்து வரும் வாசனையும் அதனை கட்டுப்படுத்தபடுகிறது..

இனிமேலாவது பாம்பு பால்,முட்டை சாப்பிடும் என்று சொல்லுவீர்களா???




நன்றி: நான் சைவன்

கருத்துகள் இல்லை: