வியாழன், 1 ஜனவரி, 2015

புரியாத நிலை

மனநிறைவுடன் வலம்வந்தாலும்
மனதின் மூலையில் சிறுதவிப்பு...
மறுத்துவிட மனது கணக்கிட்டாலும்..
மௌனங்களே இங்கு மொழியாய்...
கண்களால் பேசியே தினம்
வதைத்திடும் பாவை..
கனவாய் இருந்தால் மனதில்
குழப்பம் ஏது..?
நனவாய் இருப்பதால்
நிம்மதி அழியுமோ...?
பார்க்கும் கண்ணில்
மூடும் இமையில்
உயிர் தரும் மூச்சில்
உரிமை கொண்டு..ஊடல் கொண்டு
கண்கள் பனிக்க
காணும் பாவையே..
என்னை விடு..
எண்ணவும் விடு...
என் நினைவுகள் நினைக்குது..
நிலவும் உண்மையோ மறுக்கிறதே..
இன்பமான குழப்பம்...

கருத்துகள் இல்லை: