சனி, 3 செப்டம்பர், 2011

அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் ஒரு பாடல்


ஆவீன மழைபொழிய இல்லம்வீழ
அகத்தடியால் மெய்நோக அடிமை சாக
மாவீரம் காயுமென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துகொள்ளச் 
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத் 
தள்ளவொணா விருந்து வர சர்ப்பந்தீண்டக் 
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே!

ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துயர அனுபவமாம் - கற்பனை தான் !

1. பசு கன்றீன்றது 
2. அடை மழை பெய்தது 
3. வீடு இடிந்து விழுந்தது
4. மனைவிக்கு நோய்
5.வேலைக்காரன் செத்தானாம்
6. வயல் ஈரம் காயும் முன் விதைக்க ஓடினான்
7. வழியில் கடன்காரன் மடக்கினானாம் 
8. எதிரே சாவு செய்தி வந்ததாம் 
9. அப்போது எதிர்பாராது விருந்தாளிகள் வந்தார்களாம்
10.அவனையே சர்ப்பம் தீண்டி விட்டதாம்
11.அதிகாரிகள் நிலவரிக்கு வந்தார்களாம்
12.அப்போது குருக்கள் தட்சணை கொடு என்றாராம்


பாவம் எவ்வளவு துயரம் ஒருவனுக்கு. என்ன செய்வான். சிரிப்பதை தவிர

- அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் படித்தது.
நன்றியுடன் நீ. சங்கர்


கருத்துகள் இல்லை: